பி .டபிள்யூ சமல் திசாநாயக்க
நான் தற்போது இலங்கையின் முன்னணி விவசாய இயந்திர நிறுவனங்களில் ஒன்றான பிரவுன்ஸ் அக்ரிகல்ச்சரில் வெற்றிகரமாகப் பணியாற்றி வருகிறேன்.
பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரியில் வேளாண் இயந்திர தொழில்நுட்பக் கற்கைநெறியில் இணைவது, உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்துமொரு சிறந்த வாய்ப்பாகும். இது நவீன விவசாய நடைமுறைகள் பற்றிய எனது புரிதலை ஆழப்படுத்தியதுடன், இத்தொழில்துறையில் பயனுறுதிமிக்கதொரு பங்களிப்பை வழங்குவதற்கு என்னைத் தயார்படுத்தியது.
இப்பாடநெறியின் மூலம், கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவை திறம்படப் பெற முடிந்தது, மேலும் இக்கற்கை நெறியை நிறைவுசெய்த பிறகும், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரியிடமிருந்து எனது எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் ஆதரவைப் பெற்றேன்.
உண்மையிலேயே, இக்கற்கைநெறியானது, விவசாயத் துறைக்கு அறிவுள்ள நபர்களை உருவாக்குமொரு வாய்ப்பென எனது அனுபவத்திலிருந்து நான் நம்பிக்கையுடன் கூறிக்கொள்ள முடியும்.