பி.எம்.எம்.பி. அபேவிக்ரம
பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரியில் வேளாண் இயந்திரத் தொழில்நுட்பத்தைக் கற்பது பயனுறுதிமிக்கதொரு அனுபவமாகும். இக்கற்கைநெறி தத்துவார்த்த அறிவு மற்றும் நடைமுறைப் பயிற்சியின் சரியான சமநிலையை வழங்குவதானது, மாணவர்கள் நவீன விவசாய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் நேரடித் திறன்களைப் பெற ஏதுவாக அமைகின்றது.
இப்பல்கலைக்கழகக் கல்லூரியின் விரிவுரையாளர்கள் எமக்கு உறுதுணையாக உள்ளதுடன், புத்தாக்கம், குழுப்பணி மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் ஆகியவற்றை எப்போதும் ஊக்குவிக்கின்றனர். பயிலரங்குகள் மற்றும் கள நடவடிக்கைகள் மூலம், விவசாயத் துறையில் எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கு பெறுமதிமிக்க வலுவான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொள்ள முடிந்தது.
இந்தத் திட்டம் உண்மையிலேயே என்னை நம்பிக்கையுடனும், நடைமுறைசார் அறிவுடனும் தொழில்சார் சவால்களை எதிர்கொள்ளத் தயார்படுத்தியது.