சச்சினி ரத்நாயக்க
பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரியில் எனது கற்கைக்காலத்தை நினைவு கூர்ந்துப் பார்க்கும்போது நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். இக்கல்லூரி எனக்கு திடமானதொரு அடித்தளத்தைக் கொடுத்தது; நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வளர்ச்சியடைய உதவியது. என்னை நம்பிய ஆசிரியர்கள், என்னுடன் நின்ற நண்பர்கள், இங்கு நான் பெற்ற ஒவ்வொரு சிறிய அனுபவம் ஆகியவை கூட்டாக இன்று நான் யார் என்பதை வடிவமைததுள்ளன. இது படிப்பது மட்டுமல்ல – வாழ்க்கையைக் கற்றுக்கொள்வது, நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் எனது பாதையைக் கண்டுபிடிப்பது பற்றியதானது. இந்தக் கல்லூரி என்னை இப்போது இருக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றதற்கு நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன்; மேலும் கல்லூரி கற்றுத்தந்த பாடங்கள், ஆதரவு மற்றும் நினைவுகளை நான் எப்போதும் என் இதயத்தில் சுமந்து செல்வேன்.